Tuesday, June 10, 2014

தி ஈஸ்ட் - பசுமை விகடனில் என் கட்டுரை !




கிழக்குதெ ஈஸ்ட்

இந்த உலகை ஆள்வது யார்? வழிநடத்துவதும் கட்டுக்குள் வைத்திருப்பதும் யார்? அமெரிக்கா என்று சொன்னால் நீங்கள் ஐயோ பாவம்!

நள்ளிரவு; இருட்டு. ஒரு பெரிய வீடு. சுற்றி வளைக்கிறது சிறிய கும்பல் ஒன்று. வீட்டைச் சுற்றி கச்சா எண்ணை மற்றும் பெட்ரோலியக் கழிவுகளை ஊற்றுகிறது. வீட்டினுள் படுத்திருப்பவர் லேசாக சத்தம் கேட்டு புரண்டு படுக்கிறார். சற்று நேரத்தில் வீடு தீ பிடித்து எரிகிறது. ப்ரம்மாண்டமாக வெடித்துச் சிதறுகிறது. யார் இவர்? ஏன் எரிக்கப்பட்டது இவர் வீடு?

மறுநாள் தொலைக்காட்சிகளில் இதுதான் செய்தி: “ஒரு சில நாட்களுக்கு முன்பு கடலில் பெட்ரோலிய எண்ணை கலந்ததால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டது. அதன் காரனமாக பல பறவைகளும் கடல் வாழ் உயிரினங்களும் அழிந்தது நமக்குத் தெரியும். இதற்குக் காரனமான நிறுவனத்தின் தலைவர் வீடு நேற்று இரவு வெடித்துச் சிதறியது. இதற்குக் காரனமானவர்கள் யார் என இன்னும் தெரியவில்லை

விசாரனை முடிக்கிவிடப்படுகிறது; பெரிய தொழில் நிறுவனத்தின் தலைவர் அல்லவா? ஆனால், வழக்கமாகப் பணத்திற்காக இச்செயல்களைச் செய்யும் யாரும் இல்லை எனத் தெரியவருகிறது. தொழில் முனை போட்டியாளர்களும் இல்லை என்பது உறுதியாகிறது. அப்படியானால் யார்?

இரகசிய விசாரனையில், தன்னைஈஸ்ட்என அழைத்துக்கொள்ளும் ஒரு தீவிரவாத அமைப்புதான் எனத் தெரிய வருகிறது. எதற்காக அவர்கள் இதைச் செய்தார்கள்? பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான தீவிரவாதிகளோ இவர்கள் என்ற என்னம் ஏற்படுகிறது. இத்தோடு அவர்கள் இதை நிறுத்திக்கொள்ளப்போவதாகவும் தெரியவில்லை. மேலும் இதுபோன்ற தீவிர நடவடிக்கைகள் தொடரலாம். அவர்களின் அடுத்த இலக்கு யார்? என்ற கேள்விகளோடு துவங்குகிறது படம்.



அடுத்த காட்சியில் இக்கதையின் நாயகிஜேன்அறிமுகமாகிறார். இவர் வேலை செய்வதுஹில்லர் ப்ரூட்எனும் தனியார் உளவு நிறுவனம். கார்பரேட் சாம்ராஜ்யங்களுக்கு ஊழியம் செய்பவர்கள். இதன் தலைவி ஷரோன். தங்களுக்கு எதிராகச் செயல்படும் ஈஸ்ட்”-ஐக் கண்டுபிடித்து ஒழிப்பதற்காக கார்பரேட்டுகளின் திட்டத்தின் ஒரு அங்கமாக, அந்த அமைப்பிற்குள் மெள்ள ஊடுருவும் பொறுப்பு ஜேன்-னுக்குக் கொடுக்கப்படுகிறது.

கடும் முயற்சிக்குப்பின், சாரா எனும் புதுப் பெயருடன் இக்குழுவுக்குள் ஊடுருவுகிறார் ஜேன். ஆளில்லாக் காட்டுக்குள் சாராவைக் கண்ணைக் கட்டை அழைத்துச் செல்கிறான் அக்குழுவைச் சேர்ந்த லூக்கா. அக்குழுவின் தலைவன்பெஞ்சி”. அங்கு, சில சோதனைகளுக்குப் பின்னர் சாராவும் அக்குழுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார். அடிபட்ட அவளுக்கு வைத்தியம் பார்க்கிறார் அங்கிருக்கும் ஒரு டாக்டர். அப்போது டாக்டரின் கை அவ்வப்போது நடுங்குவதைப் பார்க்கிறாள்.

அப்போது டாக்டர் சொல்லும் விவரத்திலிருந்து இக்குழுவின் ஒவ்வொரு அங்கத்தினரும் பெரிய கார்பரேட்டுக்களின் அநியாய நடவடிக்கைகளால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப் பட்டவர்கள் என்பதை அறிகிறாள்.

அடுத்த தாக்குதல் எங்கே என விவாதிக்கிறார்கள்; அதில் சாரா-வையும் சேர்த்துக்கொள்வதா வேண்டாமா என நீண்ட விவாத்த்திற்குப் பின்னர் சேர்த்துக்கொள்ளப்படுகிறார். டாக்டர், பெஞ்சி, இக்குழுவின் மற்றொரு உறுப்பினரானஇஸ்ஸிமற்றும் சாரா ஆகியோர் ஒரு டின்னருக்குச் செல்கிறார்கள்.

ஒரு மிகப்பெரிய பன்னாட்டு ஃபார்மா நிறுவனம் தனது புதிய மருந்தை சந்தையில் அறிமுகப்படுத்தும் கொண்டாட்ட விழா அது. அங்கு வரும் டாக்டர், யாருக்கும் தெரியாமல் ஷாம்பெயினில் எதையோ கலந்து எல்லோருக்கும் கொடுப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள் சாரா. அது விஷமாக இருக்கலாம் அனப் பயந்து தன் நிறுவனத் தலைவி ஷரோநைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறாள். இக்குழுவின் ஒரு அங்கமாக இப்போது தான் நடிப்பதால் தன்னால் எதுவும் இப்பொது செய்ய முடியாதாகையால், போலீசுக்குத் தகவல் தெரிவித்து இவர்களிக் காப்பாற்றுமாறு ஷரோனிடம் இறஞ்சுகிறாள் சாரா. ஆனால், ஷரோனோ. இவ்விருந்து கொடுக்கும் ஃபார்மா நிறுவனம் தனது வாடிக்கையாளர் அல்லவென்றும், அதனால் தனக்கு எந்த லாபமும் இல்லையாகையால் தான் எதுவும் செய்யப்போவதில்லை என இறக்கமில்லாமல் சொல்கிறாள்.

விருந்து முடிந்து திரும்பவும் மறைவிடத்திற்கு வரும் வழியில், எப்படி இவ்வளவு உயிர்களையும் கொல்லலாம் என டாக்டருடன் வாதிடுகிறாள் சாரா. அப்போதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயத்தை வெளியிடுகிறார் டாக்டர். அந்த விருந்தில் தான் கலந்த்து விஷம் அல்ல; அதே நிறுவனம் தயாரிக்கும் ஃப்லோரோக்வினோலோன்எனும் ஆண்டிபையாட்டிக் மருந்தைத்தான் எனச் சொல்கிறார்.

அக்கம்பெனி சந்தையில் விற்கும் மருந்து முறையான ஆய்வுகளுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது அல்ல என்றும் அதன் பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கிறான். உனக்கு எப்படித் தெரியும் என சாரா கேட்கவும், அந்த மருந்தால் பாதிக்கப்பட்டவன் தான் என்றும் அதனால்தான் அவ்வப்போது தனக்கு வலிப்பு வருவதாகவும் சொல்கிறார் டாக்டர்.

டின்னர் முடிந்து வந்த மறுநாள் அந்நிறுவனத்தின் கவனத்திற்கு இச்செயல் கொண்டுவரப்படுகிறது. அதைப் பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல், ”பாருங்கள் இந்த மருந்து எங்களை ஒன்றும் செய்யவில்லைஎன அந்நிறுவனத் தலைவி பேட்டி அளிக்கிறாள் தொலைக்காட்சியில். ஆனால், ஒரு சில நாட்களைலேயே அவளையும் பக்கவாதம் தாக்குகிறது. நரம்புத் தளர்ச்சியுடன் தொலைக்காட்சியில் தோன்று உண்மையை ஒப்புக்கொள்கிறாள் மன்னிப்புக் கேட்கிறாள். ஈஸ்ட்-டிற்கு மற்றுமொரு வெற்றி.

தான் வந்த நோக்கம் மறந்து, ஈஸ்ட்-டின் நியாயங்களைப் புறிந்து அதன் ஒரு அங்கமாக தான் மாறிக்கொண்டிருக்கிறோமோ எனும் சந்தேகம் அவ்வப்போது வருகிறது சாராவுக்கு. ஷரோன் தன் தகவல்களை நன்றாகப் பயன்படுத்தி கார்பரேட் நிறுவனங்களிடம் காசு பார்ப்பதும் புறிகிறது. இதற்கிடையில் இக்குழுவின் தலைவன் பெஞ்சியின் மீதும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.


ஈஸ்ட்-டின் அடுத்த தாக்குதல் ஒரு பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் மீது என முடிவாகிறது. அந்த ஊரின் முக்கிய நீர் நிலையில், நள்ளிரவிற்குப் பின்னர் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய கழிவுகளைக் கலக்கிறது அந்நிறுவனம். மாசுபட்ட நீரால், அவ்வூர் மக்கள் பல்வேறு அவஸ்தைக்குள்ளாகிறார்கள். நேய் எத்ரிபு சக்தி குறைகிறது. ஈஸ்ட்-டின் ஒரு முக்கிய அங்கத்தினரானஇஸ்ஸி”-யின் தந்தைதான் அந்நிறுவனத்தின் தலைவர் என்பது சாராவுக்குத் தெரிய வருகிறது.

இஸ்ஸி மூலமாக நைச்சியமாகப் பேசி அவள் தந்தையை அந்த நீர் நிலைக்கு அழைத்துவரச் செய்து அவரையும் அதன் இன்னொரு தலைவியையும் அந்த விஷ நீரில் குளிக்குமாறு துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்துகின்றனர். முதலில் நீரில் கழிவுகளைக் கலக்கவில்லை எனப் பொய் சொல்லும் அவவர்கள், நள்ளிரவுக்குப் பின்னர் தொழிற்சாலையில் இருந்து கழிவுகள் கொட்டத் துவங்கியவுடன் குட்டு வெளிப்பட தன்னீருள் அமிழ்த்தப்படுகிறார்கள். அதற்குள் பாதுகாவலர்கள் துரத்த, நடக்கும் துப்பாக்கி சண்டையில் இஸ்ஸி காயத்துடன் தப்பிக்கிறாள்.

மீண்டும் காட்டுக்குள் பதுங்குகிறார்கள்; ஏற்கனவே சாப்பிட்ட மருந்தின் கடுமையான பக்க விளைவால், டாக்டரின் நடுக்கம் அதிகமானதால் குண்டடிபட்ட இஸ்ஸி-க்கு ஆப்பரேஷன் செய்து குண்டை வெளியே எடுக்க முடியாமற் போகிறது. இஸ்ஸி இறக்கிறாள். இதனால், குழுவில் பிளவு ஏற்படுமோ என அஞ்சும் அளவுக்கு விவாதம் நடக்கிறது. கடும் வாய்ச் சண்டைகளுக்குப் பின், இன்னும் ஒன்றே ஒன்று இறுதியாகச் செய்துவிட்டு நாம் பிரியலாம் என முடிவு எடுக்கிறார்கள்.


கடைசி தாக்குதல் பற்றி சொல்கிறேன் என சாராவை தனது காரில் அழைத்துக்கொண்டு போகிறான் பெஞ்சி. அவன் காரைக் கடைசியில் நிறுத்தும் இடத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் சாரா. அது ஹில்லர் ப்ரூட்ஸ்சாராவின், அதாவது ஜேன்- ன் அலுவலகம் ! சாராதான் ஜேன் என லூகா-வுக்கு சந்தேகம் இருந்த்தாகவும், தான் அதை பின்னர் உறுதி செய்துகொண்டதையும் பெஞ்சி விளக்குகிறான். கடைசித் தாக்குதல் என்ன என விவரிக்கிறான்.

கார்பரேட்டுகளுக்கு உதவியாக உளவு செய்யும் ஜேன் போன்ற ஹில்லர் ப்ரூட்ஸ்-சின் உளவாளிகளின் இரகசியப் பட்டியலை எப்படியாவது கொண்டுவர வேண்டும் எனக் கேட்கிறான். இதற்கு முதலில் மறுக்கும் ஜேன், இப்பட்டியலை வைத்துக்கொண்டு என்ன செய்வாய் எனக் கேட்கிறாள். ஷரோனுக்காக கூலிக்கு மாரடிக்கும் அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் வேலை அல்லவா என்கிறாள். அப்பட்டியல் கையில் கிடைத்தால் அவர்களைக் கண்கானித்து அவர்கள் செயல்பாடுகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பேன் என்கிறான் பெஞ்சி.

தன் அலுவலகத்துக்குள் நுழைந்து ஷரோனின் அறைக்குச் செல்கிறாள் ஜேன். அங்கு ஷரோன் இல்லை. அவள் கம்ப்யூட்டரில் இருந்து உளவாளிகளின் முழுத் தகவலையும் தன் கை ஃபோனில் இருக்கும் சிப்-பில் பதிவு செய்கிறாள். வெளியேறும்போது ஷரோனைப் பார்க்கிறாள். அவளின் நடவடிக்கைகளை வெளிப்ப்டையாக விமர்சனம் செய்கிறாள். லிஃப்டில் இறங்கி அலுவலகத்திவிட்டு வெளியேற இருக்கையில், செக்யூரிட்டியிடம் சொல்லி அவளது ஃபோனைப் பறிமுதல் செய்கிறாள் சந்தேகப்பட்ட ஷரோன்.

இதற்கிடையே, ஷரோன் தன் கைவசமுள்ள தகவல்களை எஃப்.பி..-யிடம் அளிக்க அவர்கள காட்டுக்குள் சென்று ஈஸ்ட்-டின் மறைவிடத்தைத் தகர்த்து எறிகிறார்கள். சிலர் மட்டு தப்பிக்க டாக்டர் மட்டும் மாட்டிக்கொள்கிறார். இத்தகவல் பெஞ்சிக்கு கிடைக்கவும் ஆத்திரமாகிறான். ஜேன் கொண்டுவரும் தகவலில் உள்ள உளவாளிகளைப் பழிவாங்க முடிவெடுக்கிறான்.

வெறும் கையுடன் வரும் ஜேன்னிடம், ஷரோனிடம் மாட்டிக்கொண்டுவிட்டாய்; அவள் எஃப்.பி..யிடம் போய் நம்மை மாட்டிவிடுவதற்கு முன்னர், பரவாயில்லை மற்றவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்; முதலில் இங்கிருந்து வெளியேரலாம் இப்பொதைக்கு, என்கிறான் பெஞ்சி. மறுக்கும் ஜேன். அவனைத் தப்பித்துப் போகச் சொல்கிறாள். தான் மட்டும் இங்கிருந்து எப்படியாவது இத்தகவலை எடுத்து வருவதாகச் சொல்லி அவனை அனுப்பி வைக்கிறாள்.

அவன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பியவுடன், தனது வாய்க்குள் கைவிட்டு ஒரு சிறிய நூலை உருவுகிறாள். மெள்ள வெளிவரும் அந்நூலின் இறுதியில் ஒரு சிறிய சிப் வருகிறது. ஃப்ளாஷ்பேக்-கில், அலுவலகத்தில் ஷரோன்-இடம் சண்டை போட்ட பின்னர், கை ஃபோனில் இருந்து அத்தகவல் அடங்கிய சிப்பை மட்டும் தனியே எடுத்து ஒரு நூலில் கட்டி முழுங்கிவிடுகிறாள் ஜேன். ஆனால், வெளியே வந்த பின்னர் பெஞ்சியின் தீவிர என்னத்தைத் தெரிந்துகொண்டவுடன், கையில் எதுவும் இல்லை எனப் பொய் சொல்கிறாள்.

இப்போது உலகம் முழுவதும் உள்ள ரகசிய உளவாளிகளின் தகவல் கையில்; என்ன செய்வாள் ஜேன்? இந்த இடத்தில் சுவாரஸ்யமான ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குனர். பெஞ்சி கடைப்பிடிக்கும் முறைகளோடு கருத்து வேறுபாடு இருந்தாலும் ஈஸ்ட்டின் கொள்கைகளில் ஈடுபாடு கொள்கிறாள் ஜேன். எனவே, சிப்-ஐக் கம்ப்யூட்டரில் போடுகிறாள். அதில் இருக்கும் தகவல்களை ஏற்றுகிறாள். ஒவ்வொரு உளவாளியாக நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர்கள் செய்யும் வேலையின் அநீதியான தாக்கத்தையும் சமூகத்தின் மீதும் சுற்றுச் சூழல் மீதும் அதன் தாக்கத்தையும் எடுத்துச் சொல்கிறாள். பெரும்பாலோரை மனமாற்றி சுற்றுச் சூழல் போராளிகளாக மாற்றும் முயற்சியில் இறங்குகிறாள்.

ஈஸ்ட்-டின் தீவிரவாதம் மாறி, நியாயமான போராட்டமாக பரினமிக்கிறது. தீவிரவாதிகள், சட்டத்திற்குட்பட்ட போராளிகளாக மாறுவார்கள் எனும் கருத்தோடு கதை முடிகிறது.   
          
-     - - -
 
                 
சரி; இனி முதலில் கேட்ட கேள்விக்கு வருவோம். இப்படத்தின் இயக்குனரின் சொல்படி “       இன்று உலகை ஆள்பவர்கள் வல்லரசுகள் அல்ல; அவர்களையும் சேர்த்து ஆள்பவர்கள் உண்மையிலேயே பன்னாட்டு நிறுவனங்கள்தான். உலகின் பொருளாதாரத்தையும் அதன் தலைவிதியையும் மாற்றி எழுதும் வல்லமைகூட உள்ளவர்கள், நாட்டு எல்லை கடந்து பரவியிருக்கும் இந்த கார்பரேட்டுகள். எந்த ஒரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாத, தேவைப்பட்டால் அவற்றை தங்களுக்கு சாதகமாக வளைத்து மாற்றி எழுதும் வல்லமையும் பலமும் பொருந்திய இவர்களைக் கண்டுதான் நாம் முதலில் அஞ்சவேண்டும்”.

மிகச் சரியான சொல் இது. அமெரிக்காவின் லூசியானா மாகானத்தில் ப்ரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தின் காரனமாக மிசிஸிபி ஆற்றில் ஆயில் ஸ்லிக் எனும் கரிய படிமம் கலந்து நீரை நிரந்தரமாக அசுத்தப்படுத்தியதோடு ஆற்றங்கரையையும் அடுத்துள்ள கடற்கரையையும் முற்றிலும் மாசுபடுத்தியது.

1930-ம் ஆண்டு துவங்கி, இந்த எண்ணை நிறுவனங்களின் வளர்ச்சியால், சுமார் 2,000 சதுர மைல்கள் விவசாய நிலங்கள் பாழ்பட்டன. விவசாயிகள், அவற்றை முற்றிலும் இழக்க நேரிட்டது. அதுமட்டுமல்ல; அம்மாகானத்தில் கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதால் அவற்றை நம்பி இருக்கும் மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

நிலமையைச் சீர் செய்ய பல போராட்டக் குழுக்கள் களத்தில் குதித்தன. அவ்வப்போது ஏதாவது செய்வதாக போக்குக் காட்டுவது தவிர பெரிதாக எதுவும் செய்யவில்லை இவர்கள். அரசும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை, காரணம் அவை பன்னாட்டு நிறுவன்ங்களின் பையில் எனக் குற்றம் சாட்டுகின்றனர் இவ்வமைப்பினர். இதுபோல பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

லாபத்தை மட்டுமே வெறித்தனமான குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் இவ்வுலகை ஆள்கின்றன; நம் விதியை நிர்னயிக்கின்றன. நாம் தேர்ந்தெடுக்கும் அரசுகள் இவர்கள் பையில். சொந்த லாபத்திற்காக, சாமானியனின் பையில் இருக்கும் மீதப் பணத்தையும் பிடுங்கி அவனைக் கடனாளியாக்க இவர்கள் பரப்புரைக்கும் நுகர்வு கலாச்சாரத்திற்கு எதிராகப் போராட, மிக எளிமையான வழிகளே போதும் என இப்படம் சொல்வதாகக் கொள்ளலாம். குறைவான நுகர்வால், சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்கலாம்


---------------------------------------------------------------------